“காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார்”…!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு…!!
கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இந்தியா- பாகிஸ்தான் இடையேயான மோதல் நேற்று அமெரிக்க அரசின் பேச்சுவார்த்தையால் நேற்று முடிவுக்கு வந்தது. அதன் பின், இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்வதாக ஒப்புதல் அளித்தனர். இருப்பினும், பாகிஸ்தான் எல்லையோர மாவட்டங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு, இந்திய ராணுவம் தாக்கப்பதிலடி கொடுத்த பின் மீண்டும் போர் நிறுத்தம் அமலாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளை (12.02.2025) இரு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!! எந்தெந்த மாவட்டம்னு தெரிஞ்சுக்க இத படிங்க…!!
அதாவது,”இந்தியா, பாகிஸ்தானில் வலுவான தலைமைகள் உள்ளன என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனான வர்த்தகம் அதிகரிக்கப்படும் என்றும், காஷ்மீர் பிரச்சனைக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமரசம் செய்ய தயார்” என்றும் அறிவித்துள்ளார். மேலும், காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது, அதில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


























