நவ.19 அன்று தரவரிசை தேர்வுகள் தேதி மாற்றம் – குரூப் 1 தேர்வு எதிரொலி!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களுக்கான தரவரிசை தேர்வு முன்னர் அறிவித்த தேதியில் இருந்து தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு நாள் மாற்றம்:
தமிழகத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய 2 ஆண்டுகளில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனால் எந்த விதமான பொது நடவடிக்கைகளும் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அதுபோல், அரசு பணிக்கான போட்டி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடப்பு 2022ம் ஆண்டின் ஆரம்பம் முதல் நோய் பாதிப்பு குறைந்து உள்ளதால், அரசு துறைகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு போட்டி தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் ‘இந்த’ கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததில் முறைகேடு? மத்திய அரசு விளக்கம்!!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், வரும் நவம்பர் 19ம் தேதி அன்று குரூப் 1 தேர்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதே நாளில் திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களுக்கான தரவரிசை தேர்வுகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு தேர்வுகளுக்கும் ஒன்றாக விண்ணப்பித்த தேர்வர்களுக்கு இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தற்போது பல்கலையின் தரவரிசை தேர்வுகள் நவம்பர் 20ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.