நாட்டில் ‘இந்த’ கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததில் முறைகேடு? மத்திய அரசு விளக்கம்!!
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவிட் ஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதில் முறைகேடுகள் நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதை பற்றி பார்ப்போம்,
கோவாக்சின்
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் கொரோனா தொற்றால் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்க தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் புனே இந்திய சிரம் நிறுவனத்தால் கோவிட் ஷில்டு தடுப்பூசியும்,பாரத் பயோடெக் நிறுவனத்தால் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இவை மத்திய அரசிடம் பல்வேறு கட்ட சோதனையின் பிறகு ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டு வந்தது. அதனால் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியதில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் கோவாக்சின் தடுப்பூசி குறித்து மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என தெரிகிறது.
மின்துறையின் தனியார்மயமாக்கல் விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது, கோவாக்சின் தடுப்பூசி மருந்தானது எந்த ஒரு அரசியல் அழுத்தத்தின் பேரில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்து அனைத்து விதிமுறைகளை பின்பற்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் தடுப்பூசிக்கான ஒப்புதல்கள், நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேசிய கட்டுப்பாட்டாளர் குழுவால் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.