பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் துவக்கம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல இருப்பவர்களுக்காக நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு:
தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட சிறப்பு பண்டிகைகளுக்கு முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில் நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவுள்ளது. மேலும், பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி துவங்க இருக்கும் நிலையில் ஜனவரி 11 ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இதனையடுத்து, ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்ய இருப்பவர்கள் செப்.14 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் எனவும், ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய இருப்பவர்கள் செப்.15 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு அடுத்த சில மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்களும் தீர்ந்துவிடும் என்பதால் கூடிய விரைவில் டிக்கெட்காளை புக் செய்துகொள்ளும்படி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.