இன்று குரு துரோணாச்சார்யா மேளாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில் குரு துரோணாச்சாரியா மேளாவை முன்னிட்டு இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் நொய்டா நகரில் குரு துரோணாச்சாரியா மேளா இன்று நடக்க உள்ளது. ஆண்டுதோறும் டங்கூரில் நடைபெறும் இத்திருவிழாவானது மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. கண்காட்சி ஆனது மிகவும் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் முக்கிய வழிமுறைகள அறிவித்துள்ளது.
2023 செப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் – September Month Current Affairs!
மேலும் கூட்ட நெரிசல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் போன்ற அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் செப்டம்பர் 12ஆம் தேதி ஆன இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் அனைத்தும் நாளை முதல் மீண்டும் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.