தமிழகத்தில் அமலில் இருக்கும் ‘டாய்’ திட்டம் – நீதிமன்றம் ஆய்வு!
தமிழகத்தில் விபத்து உயிரிழப்புகளை தடுக்க சுகாதார துறை சார்பில், டாய் எனப்படும் தமிழ்நாடு விபத்து அவசர சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம் அமல்
தமிழகத்தில் விபத்து அவசர சிகிச்சை திட்டமான ‘டாய்’ விபத்து உயிரிழப்புகளை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக வருபவர்களுக்கு விரைவாக சிகிச்சை வழங்கப்படும். இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் உயிரிழப்புகள் குறைந்தது. மேலும் இந்த திட்டம் அரசால் செயல்படுத்தப்படுவதால் இது குறித்து வழக்கமாக உச்சநீதிமன்ற சிறப்புக்குழு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யும்.
ஆவின் நிறுவனத்தில் இத்தனை மாற்றமா? அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
அதன் படி இந்த மாதம் உச்சநீதிமன்ற சிறப்புக்குழு தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமலில் டாய் திட்டம் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறது. மேலும் இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் டாய் வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்யவும், அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டும், சிகிச்சை குறித்த ஆவணங்கள் தயாராக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.