ஆவின் நிறுவனத்தில் இத்தனை மாற்றமா? அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
தமிழக பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்றுள்ளார். தற்போது இவர் மேலாளர் மற்றும் துணை பதிவாளர்களுக்கான முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
முக்கிய உத்தரவுகள்:
தமிழகத்தில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், தொடக்க கூட்டுறவு சங்கத்தில் செயல்படாமல் உள்ள உறுப்பினர்களை சங்கங்களுக்கு பால் ஊற்றும் உறுப்பினர்களாக மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அத்துடன் செயல்பாட்டில் இல்லாத சங்கங்களின் நிலை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 3,312 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
மேலும் துணை பதிவாளர்கள் மாவட்டங்களில் பால் உற்பத்திக்கு வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து பால் வரத்தினை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை கால தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் கால்நடை பராமரிப்பு விவரங்கள், நோய் பாதுகாப்பு விவரங்களை சுவரொட்டிகள் மூலம் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.