ரயில் விபத்தில் 260 பேர் உயிரிழப்பு – புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியீடு!
ஒடிசா மாநிலம் பஹனஹா பஜார் ரயில் நிலைய பகுதியில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக நடந்த ரயில் விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் விபத்து:
ஒடிசா மாநிலம் பஜார் ரயில் நிலைய பகுதியில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது. அப்போது ரயில் பெட்டிகள் தடம் புரண்ட வேளையில் அதே வழியில் வந்த ஹவுரா அதிவிரைவு ரயிலும் விபத்திற்குள்ளானது. இந்த 3 ரயில்களும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 260-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் அமலில் இருக்கும் ‘டாய்’ திட்டம் – நீதிமன்றம் ஆய்வு!
இதனை அறிந்து சம்ப இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாத நபர்களை கண்டறிய அவர்களின் புகைப்படங்களை ரயில்வே துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.