தமிழகத்தில் நாளை (டிச.26) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – வெளியான தகவல்!!

0
தமிழகத்தில் நாளை (டிச.26) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – வெளியான தகவல்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தனமாயாலன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தனமாயாலன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 10 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த திருவிழாவில் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு சுசீந்திரம் தனமாயாலன் கோவிலில் நாளை தேர் திருவிழா நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் பூக்கள் & முட்டை அதிரடி விலை உயர்வு – பண்டிகை கால எதிரொலி!

இந்த தேர்த்திருவிழாவை காண பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதுண்டு. இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு கட்டும் விதமாக ஜனவரி 20ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நாளை குறைந்தளவு பணியாளர்களை கொண்டு அரசு அலுவலகங்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!