தமிழகத்தில் பூக்கள் & முட்டை அதிரடி விலை உயர்வு – பண்டிகை கால எதிரொலி!
கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களான முட்டை மற்றும் பூக்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
விலை உயர்வு:
அத்தியாவசியமாக பயன்படுத்தும் பொருட்களின் விலையானது பண்டிகை சமயங்களில் அதிக தேவை இருப்பதால் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் இதுவரை இல்லாத அளவிற்கு முட்டை விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் 5 ரூபாய் 70 காசுகளாக மட்டுமே அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது புதிய உட்சமாக மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 5 ரூபாய் 75 காசுகளாக கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும் பண்டிகை நேரத்தை ஒட்டி முட்டை விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது.. பொதுமக்களுக்கு சூப்பர் செய்தி!!
இதே போல் பூக்களின் சந்தையில் பூக்களின் விலையானது கடந்த வாரத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ என்று அளவில் பூக்களின் விலை – மல்லி ரூபாய் 1500, சம்பங்கி பூ ரூபாய் 150, பன்னீர் ரோஸ் ரூபாய் 150, கனகாம்பரம் ரூபாய் 1500, சாக்லேட் ரோஸ் ரூபாய் 150, சாமந்திப்பூ ரூபாய் 150, குண்டுமல்லி ரூபாய் 800 என்ற விலையில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முட்டை மற்றும் பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதால் சாமானிய மக்கள் விலை உயர்வை கண்டு அச்சத்தில் உள்ளனர்.