சுங்கச்சாவடி கட்டணம் வசூலில் புதிய முறை அமல் – மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!

0
சுங்கச்சாவடி கட்டணம் வசூலில் புதிய முறை அமல் - மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!

இந்தியாவில் சுங்கச்சாவடி கட்டணம் என்பது பெரிய தலைவலியாக இருந்து வரும் நிலையில் புதிய அமைப்பு குறித்து என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடி கட்டணம்

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக சுங்க சாவடிகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சுங்கச்சாவடி கட்டணம் ஒவ்வொரு முறையும் உயர்த்தப்படுவது மக்கள் மத்தியில் பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி சுங்க சாவடி கட்டணத்தில் புதிய முறை அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Repco வங்கியில் ரூ.1,50,000/- மாத சம்பளத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

அதில் சுங்க கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது என்று புகார்கள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு போக்குவரத்து எடுத்துக் கொள்ளும் காலம் என்பது வெகுவாக குறைந்துள்ளது. அதனால் சுங்க கட்டண முறையை நீக்கி புதிய அமைப்பு நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். புதிய நடைமுறை ஜிபிஎஸ்ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு சுங்க கட்டண முறையாக இருக்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இனி வாகனம் ஓட்டுபவர்கள் சுங்க சாவடிகளின் நிற்க வேண்டிய தேவை இருக்காது. இந்த முறை நடைமுறைக்கு வந்தால் அனைத்து வாகனங்களிலும் புதிய நம்பர் பிளேட் பொருத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் சுமார் 1000 சுங்க சாவடிகள் தற்போது பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!