தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பயிற்சிக்கு வராத 1500 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் பணி
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள மூன்று பாராளுமன்ற தொகுதிகளில் 19400 அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அவர்களுக்கான தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள் வாக்கு என்னும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என வகைப்படுத்தி அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் சென்னையில் உள்ள மூன்று பாராளுமன்ற தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 24 ஆம் தேதி முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் 1500 பேர் பங்கேற்காமல் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத 1500 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உளளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி, ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
Repco வங்கியில் ரூ.1,50,000/- மாத சம்பளத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!