மாணவர்களுக்கு குஷி நியூஸ்….இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!! “அரசு திடீர் அறிவிப்பு”..!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழையின் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து, மீண்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ‘சிக்கல் சிங்காரவேலர் கோவில் தேரோட்டம் மற்றும் அம்மனிடம் முருகன் வேல் வாங்கும் நிகழ்வு’ முதலிய திருவிழாக்கள் வெகு விமர்சையாக இன்று நடைபெறுவதை முன்னிட்டு, நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
























