
இன்று வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (பிப்.02) மன்னர் வளைகுடா பகுதியில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு திசை நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று (பிப்.03) தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை – போடி இடையேயான ரயில் சேவை ஒத்திவைப்பு – பயணிகள் அதிருப்தி!!
அதனை தொடர்ந்து பிப்.4 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். பிப். 5 ,6, 7ம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பிப். 3, 4ம் தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மேற்சொன்ன 2 நாட்கள் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.