மதுரை – போடி இடையேயான ரயில் சேவை ஒத்திவைப்பு – பயணிகள் அதிருப்தி!!

0
மதுரை - போடி இடையேயான ரயில் சேவை ஒத்திவைப்பு - பயணிகள் அதிருப்தி!!
மதுரை - போடி இடையேயான ரயில் சேவை ஒத்திவைப்பு - பயணிகள் அதிருப்தி!!
மதுரை – போடி இடையேயான ரயில் சேவை ஒத்திவைப்பு – பயணிகள் அதிருப்தி!!

தமிழகத்தில் மதுரை – போடி இடையே 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்படவிருந்த விரைவு ரயில் சில பணிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரயில் சேவை:

தமிழகத்தில் மதுரை மற்றும் போடி இடையே ரயில் பாதை அகலப்படுத்தும் பணி கடந்த ஆட்சி காலத்தில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடந்த 2022ம் ஆண்டு மக்களுக்கு ரயில் சேவையை அளிக்கும் பொருட்டு மதுரை மற்றும் போடி இடையேயான ரயில் பாதை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – அரசு தேர்வு இயக்குனர் புதிய அறிவிப்பு!!

Follow our Instagram for more Latest Updates

இந்தப் பகுதிகள் முடிவடைந்து சோதனை ஓட்டமும் சிறப்பாக நிறைவு பெற்ற நிலையில் தேனி வரை இயங்கும் பயணிகள் ரயில் மற்றும் சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் விரைவு ரயில் ஆகியவை 19ஆம் தேதி முதல் போடி வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இதனையடுத்து மக்கள் ரயிலில் பயணிக்க திட்டமிட்டு வந்த நிலையில் மீண்டும் ரயில் சேவையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் தற்போது மதுரை ரயில்வே நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இதன் காரணமாக 16-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை இரு மார்க்கமாகவும் ரயில் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிப். 19ம் தேதி ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!