தொடர்ந்து உயரும் ஆபரணத்தங்கத்தின் விலை- அதிர்ச்சியில் பெண்கள்.. இன்றைய நிலவரம் இது தான்!
தமிழகத்தில் நேற்றை தொடர்ந்து இன்றும் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 40 உயர்ந்துள்ளது. இந்த தங்கத்தின் விலையானது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை:
இந்தியாவில் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் காரணமாக தங்கத்தின் விலை தின்தோறும் மாற்றமடைந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து கிராம் ரூ. 5,985-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்கப்போகும் கனமழை – வானிலை மையம் அறிக்கை!
அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 40 உயர்த்து சவரன் ரூ. 47,920-க்கும் கிராம் ரூ.5,9990-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி 50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.78.00க்கும் கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 2வது நாளாக உயந்துள்ள தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.