தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்கப்போகும் கனமழை – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்கப்போகும் கனமழை – வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கனமழை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், செப்டம்பர் 17ம் தேதி வரைக்கும் கனமழை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது. இதனிடையே, தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – இன்றைய பெட்ரோல், டீசலின் விலை பட்டியல் வெளியீடு!

அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் கூடுதல் வெப்பம் நிலவுவதாக பொதுமக்கள் அசௌகரிகம் தெரிவித்துள்ளனர். மேலும், கடலோர மாவட்டங்களில் சுறாவளிக்காற்று 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்த்துக் கொள்ளும் படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!