இப்போ தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கலைகட்டுது – ஒரு வழியாக சாதித்து காட்டிய கதிர்! வைரல் ப்ரோமோ!
அன்றாடம் இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். வெகு நாட்களுக்கு பிறகு இந்த தொடரில் தற்போது விறுவிறுப்பை கூட்டும் படி ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தன் மனைவிக்கு சிகிச்சை செய்த செலவிற்கு உண்டான பணத்தை திருப்பி தரவேண்டும் என்ற வைராக்கியத்துடன் கதிர், மூர்த்தி வீட்டை விட்டு வெளியேறி முல்லையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார். என்னதான் பாடு பட்டாலும் அந்த ஹோட்டலில் இவரால் லாபம் பார்க்க முடியவில்லை.
இதனால் இவரும் பல சலுகைகளை வரும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார். மேலும் இதெற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று இன்று வரும் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பையும் கதிர் வெளியிடுகிறார். அதோடு தங்களால் இயன்ற பணத்தை போடுங்கள் என உண்டியல் ஒன்றையும் வைக்கிறார். இவரின் இந்த் திட்டம் ஒர்க் அவுட் ஆனாதா என்பது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி எல்லாரும் இலவச சாப்பாடு என்பதால் ஹோட்டலில் குவிகின்றனர். ஒரு சமயத்தில் சாப்பாடே காலியாகி விட உண்டியலில் எந்த காசும் வரவில்லை என முல்லையின் அம்மா உண்டியலை கீழே தள்ளிவிடுகிறார். ஆனால் உண்டியல் முழுக்க பணம் இருப்பதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகின்றனர். கதிர், முல்லைக்கு சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீரே வந்துவிடுகிறது. பல நாட்களுக்கு பிறகு தற்போது பாசிடிவ் கதைக்களத்துடன் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நகர ஆரம்பித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்