உச்சகட்ட பதற்றத்தில் பாக்கியலட்சுமி சீரியல்.. தாலி கட்ட போகும் கோபி – திருமணத்தை நிறுத்த வரும் ஈஸ்வரி, இனியா!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், ஈஸ்வரி, இனியாவும் திருமணத்தை நிறுத்த ஆட்டோவில் கிளம்பி வருகின்றனர். அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், தற்போது கோபி ராதிகாவின் திருமணம் குறித்த காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. ராமமூர்த்தி கல்யாணத்தை நிறுத்த வந்தும் கூட கோபி கேட்பதாக இல்லை. அதனால் மனம் வருத்தப்பட்ட ராமமூர்த்தி வீட்டிற்கு செல்கிறார். அங்கே ஈஸ்வரி என்ன நடந்தது என கேட்டும் அவர் உண்மையை சொல்லவில்லை. இரவெல்லாம் தூங்காமல் வருத்தத்தில் இருக்கிறார். இதற்கிடையே பாக்கியா தனக்கு கொடுத்த சமையல் ஆர்டரை செய்து கொண்டிருக்க, கோபியும் ராதிகாவும் குறுக்கே வந்து குத்தி காட்டி பேசுகின்றனர்.
ஆனால் அவர்கள் பேசுவதை காதில் வாங்காமல் பாக்கியா தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கோபி பாக்கியாவிடம் நீ இங்கே இருந்து நான் ராதிகா கழுத்தில் தாலி கட்டுவதை பார்க்க வேண்டும் என சொல்கிறார். பின் ராமமூர்த்தி சோகமாக இருப்பதை பார்த்து ஈஸ்வரி என்ன ஆச்சு என கேட்க, இப்போது கோபி ராதிகாவுக்கு கல்யாணம் என ராமமூர்த்தி சொல்கிறார்.
நம்ம வெண்பாவா இது? ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் பாரதி கண்ணம்மா வில்லி? ரசிகர்கள் ஷாக்!
Exams Daily Mobile App Download
திருமணத்தை நிறுத்த ஈஸ்வரியும், இனியாவும் கிளம்பி செல்கின்றனர். அவர்கள் ஆட்டோவில் வேகமாக செல்ல, திருமண மேடையில் கோபி ராதிகா இருப்பதை பார்க்க முடியாமல் பாக்கியா சமையல் அறையில் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார். இந்நிலையில் ஈஸ்வரி ஆட்டோ மண்டபத்திற்கு வர, கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்ட செல்கிறார். இனியாவும், ஈஸ்வரி வேகமாக மண்டபம் உள்ளே வருகிறார்கள். இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது. இந்த பரபரப்பு ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்