TET தேர்விற்கான விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள் – TN TRB அறிவிப்பு!
TET தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஜூலை 11 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், அதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால் திருத்தம் செய்ய நினைப்பவர்கள் உடனடியாக திருத்தம் செய்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
TET தேர்வு:
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று வெளியிட்டது. இதையடுத்து, மார்ச் 14 ஆம் தேதி முதல் TET தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், TET தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 26 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஆசிரியர் தகுதி தேர்விற்கான முதன்மை தேர்வு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்விற்கான விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜூலை 11 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஜூலை 16 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பங்களை திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனால், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நினைக்கும் விண்ணப்பதாரர் trb.tn.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று விவரங்களை திருத்தம் செய்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தங்களது ஐடி மற்றும் விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொள்ளலாம்.
ஜூலை 22 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – சூதாட்ட விடுதிகள் மூடல்! அரசு நடவடிக்கை!
தற்போது எப்படி விண்ணப்பங்களை திருத்தம் செய்வது என்பதை பார்க்கலாம். முதலில் TN TRBன் அதிகாரபூர்வமான இணையதள முகவரியான trb.tn.nic.in க்கு சென்று Tamil Nadu Teachers Eligibility Test 2022 என்கிற இணைப்பிற்குள் செல்ல வேண்டும். பின்பு, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைக் கிளிக் செய்து உங்களது சான்றுகளை பதிவிட வேண்டும். பின்பு, தேவையான திருத்தங்களை செய்து அவற்றை save செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.