ஜூலை 22 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – சூதாட்ட விடுதிகள் மூடல்! அரசு நடவடிக்கை!
உலகின் மிகப்பெரிய சூதாட்ட மையத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக, சூதாட்ட விடுதிகள் மற்றும் பிற வணிகங்களை முழுவதுமாக நிறுத்துவதாகவும், இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 22ம் தேதி வரை நீடிக்கும் என்று மாக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு :
சீன அரசாங்கத்தின் சிறப்பு நிர்வாக பிராந்தியமான மாக்கோவில் வரும் ஜூலை 18ம் தேதியன்று முடிவுக்கு வர இருந்த கட்டுப்பாடுகளை அரசாங்கம் அடுத்த வாரம் வரை நீட்டித்துள்ளது. அதாவது, உலகின் மிகப்பெரிய சூதாட்ட மையமான மாக்கோவில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக, சூதாட்ட விடுதிகள் மற்றும் பிற வணிகங்களை முழுவதுமாக நிறுத்துவதாகவும், இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 22ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மாக்கோ அரசாங்கம் கடந்த ஜூலை 11ம் தேதி முதல் நகரத்தில் பணி நிறுத்தத்தை அமல்படுத்தியது.
Exams Daily Mobile App Download
குறிப்பாக சூதாட்ட விடுதிகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளை தவிர குடியிருப்பாளர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறுவதை தடை செய்தது. இந்நிலையில் மாக்கோ பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை அரசாங்கம் ஜூலை 22ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சூதாட்ட விடுதிகளை மூடுவதற்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையில் மாக்கோ நகரில் ஜூன் மாத நடுப்பகுதியில் இருந்து சுமார் 1,700 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
கோவை & திருவனந்தபுரம் முக்கிய ரயில் சேவைகள் ரத்து – ரயில்வே அறிவிப்பு!
இப்போது மாக்கோ நிர்வாகம் சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கையை கடைப்பிடிப்பதால், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ளனர். இதற்கிடையில் மக்காவோவின் 600,000 குடியிருப்பாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கைகள் தகவல் அளித்துள்ளது. ஆனால் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் மாறுபாட்டுடன் சீன நகரங்கள் போராடுவது இதுவே முதல் முறையாகும்.