
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி.. மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!
கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால், அது மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே நிகழும் தாக்குதலை தொடர்ந்து, அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்துள்ளது.
Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? DRDO ஆணையத்தில் உங்களுக்கான சூப்பர் வேலை இதோ!
அதாவது, தமிழகத்தில் நேற்று (09-05-2025) தங்கம் விலையானது ஒரு கிராம் ரூ.9,015 ஆகவும், ஒரு சவரன் ரூ.72,120 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் “இன்று (10-05-2025) தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9045-க்கும், சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலையானது எவ்வித மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ,1,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

























