பாரதியை கொடுமைப்படுத்தும் தீவிரவாதிகள், பெண்களை நாசம் செய்தவனை கொலை செய்த கண்ணம்மா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதியை தீவிரவாதிகள் கட்டி வைத்து கொடுமைப்படுத்துகின்றனர். மறுபக்கம் சௌந்தர்யா பாரதி என்ன நிலைமையில் இருக்கிறார் என தெரியாமல் பதட்டமடைகிறார்.பின் பெண்களை நாசம் செய்யும் தீவிரவாதியை கண்ணம்மா கொன்று விடுகிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதியின் திட்டம் தெரிந்து தீவிரவாதிகள் பாரதியை கட்டி வைத்து சித்திரவதை செய்கின்றனர்.பாரதியிடம் எவ்வளவு திமிரு இருந்தால் எங்களை எல்லாம் மயக்கம் போட வைத்துவிட்டு தப்பித்து சென்று இருப்பாய் என தீவிரவாதிகள் பாரதியை அடிக்கின்றனர். பின் மத்திய அமைச்சர் உயிர் எங்களுக்கு முக்கியம் அதனால் தான் உன்னை உயிருடன் வைத்திருக்கிறேன் என தீவிரவாதி சொல்கிறார். மறுபக்கம் தீவிரவாதி ஒருவன் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறான்.
அவனிடம் தப்பிக்க முடியாமல் பெண்கள் கஷ்டப்படுகின்றனர். பின் சௌந்தர்யா நான் உள்ளே போக வேண்டும் என பிடிவாதம் செய்கிறார். போலீசார் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என சொல்ல, சௌந்தர்யா என் மகன் பாரதிக்கு என்ன ஆச்சு என கேட்க பாரதியை தீவிரவாதிகள் அடிக்கும் வீடியோ ஒன்றை போலீசார் காட்டுகின்றனர். செய்தி சேனலில் அது ஒளிபரப்பாகி வருகிறது. சௌந்தர்யா அதை பார்த்து வருத்தப்படுகிறார். என் மகன் எவ்வளவு கஷ்டப்படுகிறான் என சௌந்தர்யா கதறி அழ விக்ரம் கவலைப்படாதே என ஆறுதல் சொல்கிறார்.
பின் பிணைக்கைதியாக இருக்கும் நர்ஸ் ஒருவர் அழ கண்ணம்மா அழாதே, இந்த சூழ்நிலையில் அழுதால் நாம தான் கஷ்டப்பட வேண்டும். அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என சொல்ல, அந்த நர்ஸ் கேட்காமல் அழுது கொண்டே இருக்கிறாள். கண்ணம்மாவிடம் அந்த நர்ஸ் நான் அதை நினைத்து அழவில்லை வேற விஷயம் என சொல்ல, இங்கே இருக்கும் ஒருவன் என்னை நாசம் செய்துவிட்டான் என சொல்லி அழுகிறாள். உடனே கண்ணம்மா அதை கேட்டு கோபப்படுகிறார். பின் அந்த தீவிரவாதி வந்து பெண்களில் ஒருவரை தேர்வு செய்கிறார். அப்போது அவன் அஞ்சலியை அழைக்க ஆனால் கண்ணம்மா அஞ்சலியை போக வேண்டாம் என சொல்லி நான் வருகிறேன் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
கண்ணம்மா அந்த தீவிரவாதி உடன் செல்ல இங்கே போகலாம் என அவன் சொல்கிறான். ஆனால் கண்ணம்மா வேண்டாம் இந்த ரூமிற்குள் செல்லலாம் என சொல்ல, நீ அட்மின் ஆபிசர் தான உனக்கு எல்லா இடமும் தெரியும் என சொல்லி கண்ணம்மா சொல்லும் இடத்திற்கு செல்கிறார். அந்த இடத்திற்கு சென்றதும் அவன் கண்ணம்மாவிடம் தவறாக நடந்து கொள்ள கண்ணம்மா அவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதால் அருகே இருந்த கத்திரிக்கோலை எடுத்து அவனை கொலை செய்துவிடுகிறார். அவன் கழுத்திலும் நெஞ்சிலும் குத்தி விட கண்ணம்மா முகத்தில் ரத்தம் தெரிகிறது. கண்ணம்மா கோபத்துடன் அவனை பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்