ஊர் முழுவதும் ட்ரெண்டான கதிர் முல்லை வீடியோ, வீட்டை வாங்க நினைக்கும் ஜனார்தனன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லை ஹோட்டல் வீடியோ ட்ரெண்ட் ஆனதை நினைத்து சந்தோசப்படுகின்றனர். பின் கண்ணன் வீட்டில் அனைவருக்கும் வீடியோவை காட்ட தனம் மற்றும் ஜீவா ஆகியோர் அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர். பின் ஜனார்த்தனன், மூர்த்தி வீட்டை வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் மூர்த்தியிடம் மாத்திரை காலியாகிவிட்டது, மறுபடியும் மருத்துவரை பார்க்க போக வேண்டும் என சொல்கிறார். பின் தனத்திடம் மூர்த்தி காலையில் சீக்கிரமாக மேக்கப் போட கிளம்பினார்களே என்ன ஆச்சு என கேட்க, தனம் மீனாவை எழுப்ப தான் மிகவும் கஷ்டமாக இருந்ததாக சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா காலையில் எழுந்து குளித்து கிளம்பிட்டாள் என தனம் சொல்கிறார். பின் மூர்த்தி நானும் தெரியாமல் மீனாவை கூட போக சொல்லிவிட்டேன் என சொல்ல, அவங்க இங்கே தான் சண்டை போடுகிறார்கள் வெளியே ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என தனம் சொல்கிறார். ஆனால் மீனா தான் நான் காலையில் போகும் போது உன் புருஷன் தூங்குவானா என கேட்டு கண்ணன் தலையில் தண்ணீர் ஊற்றியதாக சொல்கிறார்.
அப்போது கண்ணன் வர நீங்க எல்லாரும் வீடியோ பார்த்துவிடீர்களா என கேட்கிறார். என்ன வீடியோ என தனம் கேட்க, கதிர் அண்ணன் சமைக்கும் வீடியோ தான் ஊர் முழுவதும் ட்ரெண்ட் என சொல்லி வீடியோவை காட்டுகிறார். தனம் அதை பார்த்து சந்தோசப்பட மூர்த்திக்கு கோவம் வருகிறது. மறுபக்கம் முல்லை கதிர் கடையில் வேலை பார்த்து கொண்டிருக்க, கடைக்கு கஸ்டமர் வருகின்றனர். அவர்கள் கதிரை பார்த்ததும் இவர் தான வீடியோவில் வந்தவர் என சொல்ல, கதிர் முல்லையிடம் மீண்டும் இது போல செய்து காட்டுங்கள் என சொல்கிறார்கள். கதிர் வீடியோவில் வருவது போல செய்து காட்ட கஸ்டமர் வீடியோ எடுக்கிறார்கள். மல்லி அதை பார்த்து கிண்டல் செய்ய முல்லை கடைக்கு விளம்பரம் கிடைத்தால் நல்லது தான் என சொல்கிறார்.
புது ஆர்டர் வாங்கிய பாக்கியா, இனியா பற்றி பேசி வருத்தப்பட்ட கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
மறுபக்கம் ஐஸ்வர்யாவும் மீனாவும் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகின்றனர். அப்போது தனம் நேரமாகினால் போன் செய்து சொல்லமாட்டீங்களா ? மாமா கேட்டுக் கொண்டே இருந்ததாக சொல்கிறார். பின் ஐஸ்வர்யாவிடம் அங்கே எல்லாருக்கும் வேலை பிடித்து இருந்ததா என கேட்க, ஐஸ்வர்யா ஆமாம் என சொல்கிறார். மீனா சோகமாக இருக்க, இவள் வேலை செய்ய நான் ஏன் அதி காலை எழுந்து போக வேண்டும் என கேட்கிறார். பின் பயங்கரமாக தலை வலிப்பதாக சொல்ல ஐஸ்வர்யா டீ போடுவதாக சொல்கிறார். பின் மூர்த்தியும் ஜீவாவும் வர அவர்களை சந்திக்க நிலம் விற்பவர் வருகிறார். அவர் மூர்த்தியிடம் நீங்க பார்த்த இடத்தை வேற ஒருவர் பார்த்து இருக்கிறார். அவர் உடனே இடத்தை முடிப்பதாக சொன்னதாக சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
மூர்த்தி வீட்டில் பேசிவிட்டு சொல்வதாக சொல்கிறார். பின் அவர் சென்றதும் ஜீவா என்ன செய்வது என தெரியாமல் இருக்க மூர்த்தி என்ன செய்ய முடியும் வேறு இடம் தான் பார்க்க வேண்டும் என சொல்கிறார். அப்போது மீனா எதோ சொல்ல வர ஆனால் சொல்லாமல் மறைக்கிறார். பின் மீனாவின் அப்பா மூர்த்தியை பார்க்க வர வீட்டை விற்பது பற்றி கேட்கிறார். ஆனால் மூர்த்தி எதுவும் சொல்லாமல் இருக்க வேறு இடத்தில் கொடுத்துவிட்டு அப்பறம் பரம்பரை வீட்டை பார்க்க முடியாமல் கஷ்டப்பட வேண்டும். எனக்கு கொடுத்தால் எத்தனை நாள் வேண்டும் என்றாலும் இங்கே நீங்கள் தங்கி கொள்ளலாம். அதனால் யோசித்து முடிவை சொல்லுங்கள் என சொல்கிறார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்