தமிழக ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு – மே 29ம் தேதிக்கு தள்ளிவைப்பு!
தமிழக ஆசிரியர் வாரியம் நடத்தும் பொதுமாறுதல் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வுக்கான நடப்பாண்டு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு:
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வுகள் தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதற்காக கல்வி ஆண்டு முடியும் தருவாயில் அனைத்து மாவட்ட வாரியாக இதற்கான விண்ணப்பங்கள் ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்டு, குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வு நடத்தப்படும்.
UG நீட் தேர்வு முடிவுகள் 2023 – எதிர்பார்ப்பில் தேர்வர்கள்.. வந்தாச்சு நியூ அப்டேட்!
இந்நிலையில், முன்னதாக நடப்பு ஆண்டு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மே 26ம் தேதி பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மே 29ம் தேதியும், இடைநிலை ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு மே 29-க்கு பதில் 30ம் தேதியும் நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.