அரசுக்கு ‘ஸ்டிரைக் நோட்டீஸ்” – அகவிலைப்படி கேட்கும் அரசு ஊழியர்கள்!
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களுக்காக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
நோட்டீஸ்:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 4% உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் தற்போது போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் ஊழியர்களின் பணி சுமையானது அதிகரித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா – மாநில அரசு கண்டிசன்.. முழு விவரம்!
இதனை சரி செய்ய உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருநெல்வேலியில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அகவிலைப்படி, 15 – வது ஊதிய ஒப்பந்தத்தை துவங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 19 ஆம் தேதி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்மேளனம் ‘ஸ்டிரைக்’ நோட்டீஸ் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.