
பேருந்துகளில் பயணிக்க 2000 ரூபாய் பஸ் பாஸ்கள் அறிமுகம்…தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
சென்னையில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாள்தோறும் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் பயணிகளின் நலனுக்காக 1,000 ரூபாய் பஸ் பாஸ் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த பஸ் பாஸ் மூலம் பயணிகள் சென்னையில் உள்ள ஏசி பேருந்துகளை தவிர அனைத்து மாநகர பேருந்துகளிலும் பயணம் செய்ய முடியும்.
புதிய வரி முறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்…எந்தெந்த பொருட்களின் விலை குறையுதுன்னு தெரியுமா..??
மேலும், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக சென்னையில் பயணிகளின் தேவைக்கேற்ப ஏசி பேருந்துகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னையில் ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து மாநகர பேருந்துகளிலும் பயணிக்கும் வண்ணம் ரூ. 2,000 பஸ் பாஸ் முறை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த புதிய முறை வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் சென்னையில் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.























