புதிய வரி முறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்…எந்தெந்த பொருட்களின் விலை குறையுதுன்னு தெரியுமா..??
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், இந்த மத்திய பட்ஜெட்டில் பல்வேறு இறக்குமதி பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டது. மேலும், இந்த புதிய வரி முறைகள் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. எனவே, இந்தியாவில் எந்தெந்த பொருட்களுக்கான விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.
அதாவது, மத்திய பட்ஜெட்டில் மொபைல் போன் பேட்டரிகள் மற்றும் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் திறந்த செல்கள் ஆகியவற்றின் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மின்னணு சாதனங்கள், மொபைல் போன், LED மற்றும் LCD வகை தொலைக்காட்சிகளின் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நாட்டில் EV வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், EV பேட்டரிகளின் இறக்குமதி வரியை குறைத்துள்ளது. இதனால், EV வாகனங்களின் விலையும் குறையும். மேலும், மருத்துவ உபகரணங்கள், புற்றுநோய் உட்பட பல்வேறு மருந்து பொருட்கள், தோல் மற்றும் கப்பல் கட்டுமானத்திற்கு பயன்படும் மூலப்பொருட்கள், தங்கம், வெள்ளி மற்றும் ஆடைகளுக்கான விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



























