ரூ.50,000/- மாத ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – தமிழில் எழுத / படிக்க தெரிந்தால் போதும்!
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாலக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Night Watchman, Office Assistant ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TNRD Dharmapuri |
பணியின் பெயர் | Night Watchman, Office Assistant |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
பாலக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள Night Watchman பணிக்கென 01 பணியிடமும், Office Assistant பணிக்கென 01 பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
TNRD கல்வி தகுதி:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Night Watchman – தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- Office Assistant – 08ம் வகுப்பு
TNRD வயது வரம்பு:
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2023 அன்றைய தினத்தின் படி,18 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- BC / MBC / DC – 02 ஆண்டுகள், SC / ST / SCA – 05 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
NIELIT நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.80,000/-
TNRD ஊதியம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Level – 1 என்ற ஊதிய அளவின் படி, ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.
TNRD தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNRD விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 03.01.2024 அன்று முதல் 11.01.2024 அன்று வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.