தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை தகவல்!
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் இமாத தொடக்கத்தில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது இந்த நிலையில் அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது இதன் காரணமாக இன்று தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் அதிக பனி மூட்டம் மற்றும் லேசான மழைப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை – கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை!
மேலும் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசகூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.