அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை – கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை!

0
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை - கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் வாயிலாக தவறான தகவல்களை பரப்பி வருவதாக புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை:

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அரசு ஊழியர்கள் சிலர் தங்களுக்குள்லே யே வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி அதில் உறுப்பினராக இணைந்து அதிகாரப்பூர்வமில்லாத அரசின் தகவல்களை அதில் பதிவிடுவது தெரிய வந்துள்ளது. புதிய தகவல்கள் பலரால் பகிரப்பட்டு அமைதியை சீர்குலைக்கிறது. இது குறித்து அரசின் கவனத்திற்கு வந்ததையடுத்து பள்ளி கல்வித்துறை முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது பிரிவு 167 – ன் படி கேடு விளைவிக்கும் பொது ஊழியர் என்று கருதப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி இல்லாமல் பள்ளிக் கல்வித்துறை ஊழியர்கள் பொது வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்திருந்தாலோ அல்லது தாமாக குழுக்களை உருவாக்கி செய்திகளை பரப்பவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் குறித்த சாத்திய கூறுகளை முன்கூட்டியே அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் குற்ற சம்பவங்கள் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!