ஒரே பாலின திருமண சட்டத்திற்கு அங்கீகாரம் கிடையாது? நீதிபதி விளக்கம்!
இந்தியாவில் ஒரே பாலின திருமண சட்டம் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
திருமண சட்டம்:
இந்தியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட ரீதியாக அனுமதி தர வேண்டுமென கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒரே பாலின திருமண சட்டத்திற்கு அங்கீகாரம் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே கவுல் பாலின திருமண வழக்கு சட்ட பிரச்சனை மட்டுமல்ல அது சமூக பிரச்சனையும் கூட என கூறினார்.
பொதுவாகவே ஒரு புதிய நடைமுறைகளை சமூகம் ஏற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும். சில நேரங்களில் சட்டம் மாறும் போது சமூகமும் மாற்றமடையும். இத்தகைய சமூக மாற்றம் சட்டத்தை உருவாக்க தூண்டுகோலாக அமையும் என்றார். இறுதியாக ஒரே பாலின திருமணத்தின் மீது சமூகத்தின் பார்வை மாற்றப்பட்டால் மத்திய அரசு சட்டம் உருவாக்குவது பற்றி சிந்திக்கும் என கூறினார்.