TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் பாஸ் ஆகணும்னா இதையும் தெரிஞ்சுக்கோங்க!

0

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் பாஸ் ஆகணும்னா இதையும் தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் History பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?

(A) முதலாம் ராஜராஜன்

(B) முதலாம் பராந்தகன்

(C) முதலாம் ராஜேந்திரன்

(D) முதலாம் நரசிம்மவர்மன்

விடை – B

2. “மதுரை கொண்டான்” என்று புகழப்பட்டவர் யார்?

(A) முதலாம் ஆதித்தியா

(B) முதலாம் இராஜராஜன்

(C) இரண்டாம் இராஜராஜன்

(D) முதலாம் பராந்தகன்

விடை – D

3. ‘இந்திய சுதந்திரக் கட்சி’ எங்கு தொடங்கப்பட்டது?

(A) இந்தியா

(B) டோக்கியோ

(C) பம்பாய்

(D) மெட்ராஸ்

விடை – B

TNPSC தேர்வில் முழு மார்க் வேண்டுமா? உங்களுக்கான முக்கியமான கேள்வி பதில் இதோ!

4. லாலா லஜ்பதி ராயால் எழுதப்பட்ட நூலின் பெயர் என்ன?

(A) அன் ஹேப்பி இந்தியா

(B) டிஸ்கவரி ஆப் இந்தியா

(C) கீதாஞ்சலி

(D) மஹாராட்டம்

விடை – A

5. கீழ்கண்ட சீக்கிய குருக்களில் அவுரங்கசீப்பினால் ‘கொலை தண்டனை’ விதிக்கப்பட்டவர் யார்?

(A) குருநானக்

(B) குரு அர்ஜுன்

(C) குரு ஹர்கோவிந்த்

(D) குரு தேக் பகதூர்

விடை – D

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!