TNPSC தேர்வாணையம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு – ஆசிரியர்கள் கவனத்திற்கு!

0
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு - ஆசிரியர்கள் கவனத்திற்கு!
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு – ஆசிரியர்கள் கவனத்திற்கு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TNPSC அறிவிப்பு:

தமிழக அரசுத்துறைகளில் உள்ள அனைத்து வித காலிப்பணியிடங்களையும் முறையாக அறிவிப்பு வெளியிட்டு, முழு வெளிப்படைத்தன்மையுடன், எந்த வித முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் பணியாளர்களை நிரப்ப வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், நடத்தப்படும் அனைத்து அரசு பணிக்கான தேர்வுகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி தான் மேற்கொள்ளப்படுகிறது.

2023 – 24 முதல் காலாண்டில் திருத்தப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் – முக்கிய விவரங்கள் இதோ!

இந்நிலையில், TNPSC தேர்வாணையம் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான அறிவிப்பினை 14.12.2022 ம் தேதி வெளியிட்டது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தற்போது 20.04.2023 அன்று மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான முதல்நிலை தேர்வு கணினி வாயிலாக காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

ஆனால் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனால் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு குறித்து தங்கள் முதன்மை கல்வி அலுவலர் அல்லது மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் செய்ததற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மேற்கூறிய பணியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Official Notice 

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!