
இனி யார் வேண்டுமானாலும் பாலிடெக்னிக் படிப்பில் சேரலாம்.. தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இந்நிலையில் 2024-25 கல்வியாண்டுக்கான +2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி அன்று வெளியானது. இதை தொடர்ந்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகிய 3 முக்கிய கல்விப் பிரிவுகளுக்கான விண்ணப்பப் பதிவை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்நிலையில் பாலிடெக்னிக் பாடப்பிரிவு பற்றி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “+2 பொதுத் தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 2025-26 ஆம் கல்வியாண்டில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு (Lateral Entry) சேர முடியும்” என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், “கணிதம்-அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் மட்டுமே பாலிடெக்னிக்கில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, தற்போது அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் சேரலாம் என்ற புதிய விதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.
Join the ExamsDaily Whatsapp Group

























