மற்றொரு இந்திய விளையாட்டு வீரருக்கு கௌரவ பதவி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!
இந்திய விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர்களை மத்திய அரசாங்கம் கௌரவிப்பது வழக்கம். அதற்காக அவர்களுக்கு ராணுவம் அல்லது போலீசில் உயர் அதிகாரிகள் பொறுப்பு வழங்கப்படும். அந்த வகையில் முன்னதாக தோனி, சச்சின் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களுக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ பதவி வழங்கபடுகிறது. இந்நிலையில் மேலும் ஒரு விளையாட்டு வீரருக்கு கௌரவ பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, “உலக சாம்பியன்ஷிப், ஆசிய ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு துணை ராணுவத்தில் பிராந்திய லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி ஒன்றிய அரசு கௌரவித்துள்ளது. மேலும், ஜனாதிபதி முர்மு தலைமையில் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக நீரஜ் சோப்ரா நேற்று (14-05-2025) பதவியேற்றார். மேலும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதற்கு முன் நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றியுள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.


























