தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக மழை பொழிந்து வருவதால் உஷ்ணம் தனிந்து மாநிலம் முழுவதும் குளிர்ச்சி நிலவியது. இன்னும் சில தினங்களில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருவதால் இனி வெயில் பிரச்சனை இருக்காது என மக்களும் எண்ணிக் கொண்டனர்.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. அதாவது, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் என்றும், 2-3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகபட்ச வெயில் பதிவாகும் என்றும் அறிவித்துள்ளது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.67,700/-
குறிப்பாக சென்னையில் 40 டிகிரி வரை (அதிகபட்சமாக) வெயில் கொளுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் இரண்டாவது கோடைக் காலம் ஆரம்பமாக உள்ளது. மக்கள் தோல் நோய் உட்பட பல்வேறு வகையான நோய்கள் மூலம் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.