சென்னை மக்களுக்கு குட் நியூஸ் – மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டம் முடிந்தது!

0
சென்னை மக்களுக்கு குட் நியூஸ் - மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டம் முடிந்தது!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ் – மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டம் முடிந்தது!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டமானது தொடங்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நிறைவடைந்துள்ளது.

மெட்ரோ ரயில்:

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெட்ரோ சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் அதில் பயணம் செய்கின்றனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது. இத்திட்டம் 2015ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிறைவடைந்துள்ளது.  இது நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் குறைந்தது 25 பகுதிகளை இணைக்கும் 20 கி மீ பாதை ஆகும். இந்த  2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், மொத்தம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயர்மட்ட பாதை, சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

தமிழகத்தில் மீண்டும் கோடைக்காலம் – அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!