தமிழகத்தில் இந்த மே மாதம் அக்னி நட்சத்திர வெயிலுக்கு பதிலாக குளு குளு கோடை மழையாக பொலிந்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கும் வேளையில், தற்போது வானிலை ஆய்வு மையம் புதியதொரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதில், இன்று முதல் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, 2-3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகபட்ச வெயில் பதிவாகும் என்றும் அறிவித்துள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 100 டிகிரி வெயில் கொளுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TET தேர்வு 2024 – முதல் முறையிலேயே வெற்றி பெற வேண்டுமா??
இதனால் மக்கள் வெயிலில் அதிகம் உலவ வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த 5 நாட்களுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.