தமிழக அரசானது கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த 382 குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் செலுத்தியுள்ளது.
தமிழக அரசு:
சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வந்தது. இதில் பெண்களுக்கான இலவச பேருந்து வசதி முதலியன அடங்கும். அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
BE தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!
தற்போது தமிழ்நாடு அரசு ஆனது கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த 382 குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ₹19.1 கோடியும் , கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த 13,682 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் என ₹410.46 கோடியும் வங்கியில் டெபாசிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது அந்த பணம் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.