இனி குளு குளுகுளுனு இருக்கும்… தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது!
தமிழகத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் கோடை காலம் நிறைவடைந்ததையடுத்து தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு தொடை காற்றின் வேக மாறுபாடு ஆகியவற்றின் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, தென்காசி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி & கல்லூரிகளில் அதிரடி நடவடிக்கை – சுகாதாரத்துறை உத்தரவு!
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னர் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.