தபால் துறையில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கான ஹாப்பி நியூஸ்- வட்டி விகிதம் உயர்வு!
தபால் துறையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தியிருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்:
இந்திய தபால் துறை அதிக லாபம் தரக்கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருவதால் எக்கச்சக்கமான வாடிக்கையாளர்கள் இது போன்ற சேமிப்பு திட்டங்களில் இணைய ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும், இது போன்ற சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் மாற்றம் செய்யப்பட்டு வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. அதாவது மாத வருமான கணக்குத் திட்டம், தேசிய சேமிப்பு ,சான்றிதழ் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஆகிய திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் மாற்றம் செய்யப்படுகிறது.
இனி குளு குளுகுளுனு இருக்கும்… தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது!
தற்போது ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டிற்கான சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு உயர்த்தி இருக்கிறது . அதாவது, சிறு சேமிப்பு தொகைக்கு நான்கு சதவீத வட்டியும், ஒரு வருட டெபாசிட்டிற்கு 6.9%வட்டியும், இரண்டு வருட டைம் டெபாசிட்டிற்கு 7 சதவீத வட்டியும், மூன்று வருட டைம் டெபாசிட்டிற்கு 7% வட்டியும், 5 வருட டைம் டெபாசிட்டிற்கு 7.5% வட்டியும், 5 வருட ரெக்கரிங் டெபாசிட்டிற்கு 6.5% வட்டியும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.2% வட்டி விகிதமும், மாத வருமானத் திட்டத்திற்கு 7.4% வட்டி வீதமும், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 7.7% வட்டி விகிதமும், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.1% வட்டியும், செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு எட்டு சதவீதம் 8%வட்டி விகிதமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.