பெண்களின் திருமண வயது 16 ஆக குறைப்பு – மத்திய அரசுக்கு நீதிபதி பரிந்துரை!
இந்தியாவில் அண்மைக்காலமாக பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பெண்களின் திருமண வயதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திருமண வயது:
இந்தியாவின் திருமணச் சட்டத்தின்படி பெண்களுக்கு திருமண வயது 18 ஆகவும், ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண்களின் திருமண வயதை குறைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் நடந்த பாலியல் சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் ஜாதவ் என்பவர் குவாலியர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தபால் துறையில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கான ஹாப்பி நியூஸ்- வட்டி விகிதம் உயர்வு!
இந்த வழக்கு விசாரணையில், பதிக்கப்பட்ட பெண் தரப்பு வக்கீல் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி மைனர் என்பதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அதனை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். அப்போது நீதிபதி 14 வயதை எட்டும் போது ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பருவமடைந்து விடுகின்றனர். இந்த நிலையில் இரு பாலின ஈர்ப்பால் பாலியல் போன்ற தவறுகள் நிகழ்கிறது. இத்தகைய சூழலில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குற்றவாளிகளாக மாறுகின்றனர். அதனால் பெண்களின் திருமண வயதை 18 – ல் இருந்து 16 ஆக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.