தமிழகத்தில் நெருங்கி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த விலை நிலவரத்தை இப்பதிவில் காண்போம்.
காய்கறி விலை நிலவரம்:
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விலையானது அவ்வப்போது உயர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் நெருங்கி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. சுவாமி பக்தர்கள் விரதம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் உள்ளிட்ட தேவைகளை முன்னிட்டு மக்கள் பலரும் சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதனால் காய்கறிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.இத்தகைய நேரத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.400-க்கு விற்பனையாகி வருகிறது. அதனை தொடர்ந்து பச்சை பட்டாணி ரூ.40, பாசிப்பயறு ரூ.50 தக்காளி ரூ.38 சின்ன வெங்காயம் ரூ.60, கேரட் ரூ.45 பீன்ஸ் ரூ.35 முள்ளங்கி ரூ.35,வெண்டைக்காய் ரூ.40, சுரைக்காய் ரூ.25 முருங்கைக்காய் ரூ.120 -க்கு விற்பனையாகி வருகிறது.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
தமிழகத்தில் 19,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அறிவிப்பு!