தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் தேவைக்காக 11,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பர். இத்தகைய நேரத்தில் வழக்கத்தை விட பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 12,13,14 ஆகிய தேதிகளில் வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் 6,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இதில் குறிப்பாக சென்னையில் இருந்து 4,706 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 11,006 பேருந்துகளும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்காகவும் 8,478 பேருந்துகள் என மொத்தமாக 19,484 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சிறப்பு பேருந்துகள் குறித்து விவரங்களுக்கு 94450 14450, 94450 14436 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
SSC தேர்வுக்கு தயாராக தொடங்கியாச்சா தேர்வர்களே – உங்களுக்கான பதிவு!