TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 2022ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தற்போது விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில் தேர்வுக்கான தேதியை தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் டெட் தேர்வு நடைபெறவில்லை. பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறத் தொடங்கியது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை உடனடியாக நிரப்ப கோரிக்கை எழுந்தது. அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டது.
இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 26 வரை விண்ணப்பித்தனர். காலியாக உள்ள 9,000 அதிகமான பணியிடங்களுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வானது ஆசிரியர் தகுதித் தேர்வு ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த முறை கணினி வழி முறையில் தேர்வு நடத்தவும் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கணினி வழியில் முறையில் தேர்வு நடத்த ஏதுவாக கணினி வசதி உள்ள பள்ளிகள், கல்லூரிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமாகவுள்ள பாக்கியலட்சுமி பிரபலம் – குஷியில் ரசிகர்கள்!
அதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு என பிரத்யேக மென்பொருளைப் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியர் தேர்வாணையம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.