ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமாகவுள்ள பாக்கியலட்சுமி பிரபலம் – குஷியில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் தற்போது ஜீ தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள சீரியலில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த சீரியலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஆர்யன். இந்த தொடரில் ஆர்யன் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். பின்பு, ஆர்யனுக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் நடித்து கொண்டிருக்கும் ஷபானாவுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சில நாட்களிலேயே ஆர்யன் சீரியலில் இருந்து விலகினார். அது மட்டுமல்லாமல் திருமணமாகி சில நாட்களிலேயே ஆர்யனுக்கும் ஷபானாவுக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக மிக பெரிய பிரச்சனை என வதந்திகள் பரவியது.
Exams Daily Mobile App Download
இதனால் தான் ஆர்யன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார் எனவும் வதந்திகள் பரவியது. பின்னர், அனைத்து வதந்திகளுக்கும் ஷபானா முற்று புள்ளி வைத்தார். தற்போது ஆர்யன் ஜீ தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு சீரியலான ரத்தமா குத்துரு என்னும் சீரியலின் ரீமேக்கில் தான் ஆர்யன் நடிக்க இருக்கிறார். அதாவது அம்மா-மகள் சென்டிமென்ட்டை அடிப்படையாக கொண்டு தமிழில் ஒளிபரப்பவுள்ளனர்.
எக்கச்சக்க சீரியல்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த மூத்த நடிகை அர்ச்சனா இந்த சீரியலில் இணையவுள்ளனர். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாம் இருவர் நமக்கு இருவர் பிரபலங்களான காயத்ரி, சுபத்ரா, பிரனிகா ஆகியோரும் சீரியலில் நடிக்கவுள்ளனர். மேலும், ஆரியனுக்கு ஜோடியாக மோக் ஷிதா நடிக்க இருக்கிறார். சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.