10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.23 முதல் வழங்கப்படும் !!
SSLC பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 அசல் மதிப்பெண் சான்றிதழ் 23.10.2020 முதல் தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. கொரானா தொற்று காரணமாக பள்ளிகல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வானது நெருங்கியது. அச்சமயம் தேர்வு எவ்வாறு வைப்பது என பள்ளி நிர்வாகங்கள் குழம்பி நிலையில் இருந்தது.
அந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அணைத்து பத்தாம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக முதல் அறிவித்தார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அண்மையில் மாணவர்களின் மதிப்பெண்களும் இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
இந்நிலையில் கடந்த 12.10.2020 பத்தாம் வகுப்பு வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டு TMR லாரி மூலம் தமிழக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு சென்று 23.10.2020 அன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்