தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதில் மாணவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
கோடை விடுமுறை:
கடந்த வருடம் இதே நாளில் கொரோனா பரவலின் வீரியத்தை நாம் துளியும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதன் விளைவு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து துறைகளும் அதல பாதாளத்திற்கு சென்றன. ஆனால் கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டு உள்ளது என்றே சொல்லலாம். ஆன்லைன் கல்வி, தேர்வு என அனைவரும் அப்டேட் ஆகி விட்டனர். தமிழகத்திலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டது.
ஆர்க்கிடெக்ட் படிப்பில் மாணவர் சேர்க்கை – முழு தகவல்கள் இதோ!!
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் தொடங்கி, பாடங்கள் பதிவு செய்யப்பட்டு இலவச மடிக்கணினியில் வீடியோவாக வழங்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு முறைகளில் கல்வியை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், ஆன்லைன் கல்வி அந்த அளவிற்கு எடுபடவில்லை என்றே கூறலாம். பின்னர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதில் வருகைப் பதிவேடும் கட்டாயம் இல்லை என்பதால் பெரும்பாலான மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து விட்டது.
இந்திய ரயில்வே தனியார் மயமாக்கல் – மத்திய அமைச்சர் விளக்கம்!!
இதனால் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு காரணத்தை கண்டறிதல், மீண்டும் பள்ளிக்கு வர வலியுறுத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனையடுத்து பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு அனைவரும் ஆர்வத்துடன் வரத் தொடங்கினர். தற்போது மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்க தொடங்கி உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடந்த சில நாட்களில் பல்வேறு அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சித்தா நர்சிங் படிப்புகளுக்கான நீட் தேர்வு – ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம்!!
அதற்கும் மேலாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களையும் கொரோனா தாக்கி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையிலும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 மாதங்களுக்கு பின்னர் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பு பதிவாகி உள்ளது.
எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பெற்றோர்களும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் – தமிழக அரசு எச்சரிக்கை!!
இது தொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில், தமிழகத்தில் தற்போது கொரோனா 2ம் அலை வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி விரைந்து கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பாடங்களை நடத்துவதை விட, மாணவர்களின் உடல்நலமே முக்கியமானது என கூறியுள்ளனர். இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து விரைந்து உரிய அறிவிப்பை வெளியிடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்