ஆர்க்கிடெக்ட் படிப்பில் மாணவர் சேர்க்கை – முழு தகவல்கள் இதோ!!
கட்டடக்கலை:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆர்க்கிடெக்ட் என்னும் கட்டடவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் என்னும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். ‘கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்’ வாரியம் பி.ஆர்க்., படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்துகிறது. படிப்பை முடித்த மாணவர்கள் ‘கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்’ வாரியத்தில் தங்களை பதிவு செய்தால் மட்டுமே ‘ஆர்க்கிடெக்ட்’ ஆக பணிபுரிய முடியும்.
முகக்கவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
விவரங்கள்:
ஆர்க்கிடெக்ட் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், பாடங்கள் படித்திருக்க வேண்டும் அல்லது கணித பாடத்துடன் டிப்ளமோ படிப்பை படித்திருக்க வேண்டும். மாணவர்கள் இந்த அப்படிப்புகளில் குறைந்தது 50% மதிபெண்க்ளை பெற்றிருக்க வேண்டும். நாட்டா தேர்வுகள் வருடத்தில் இரண்டு முறை நடத்தப்படுகிறது. மாணவர்கள் இரண்டு முறையும் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
நடப்பு ஆண்டு தேர்வுகள்:
நடப்பு ஆண்டுக்கான முதல் கட்ட தேர்வுகள் ஏப்ரல் 10ம் தேதி நடக்கிறது. முதல்கட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 28ம் தேதி கடைசி நாளாகும். இரண்டாம் கட்ட தேர்வுகள் ஜூன் 12ம் தேதி நடக்க இருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 30ம் தேதி கடைசி நாளாகும். நாட்டா தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்கள் www.nata.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்